மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன சோதனையின்போது 2 கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 17வயதுக்குட்பட்ட 2 பேர் கால்களில் ஆயிதங்களை கட்டிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் தப்பியோட முயன்றபோது காவல் ஆய்வாளர் இளங்கோ அவர்களை மடக்கி பிடித்துள்ளார்.