மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன சோதனையின்போது சிக்கிய கூலிப்படை கொலையாளிகள்

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன சோதனையின்போது 2 கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 17வயதுக்குட்பட்ட 2 பேர் கால்களில் ஆயிதங்களை கட்டிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் தப்பியோட முயன்றபோது காவல் ஆய்வாளர் இளங்கோ அவர்களை மடக்கி பிடித்துள்ளார்.

அவர்களிடம் இருந்து பிச்சுவா கத்தி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் இருவரும் கமுதியில் மணிகண்டன் என்ற மணியை பழிக்கு பழிவாங்க கூலிப்படையினருடன் சேர்ந்து  கொலை செய்து வந்ததாக தெரிவித்தனர். இதனால் வழிவிட்டான், பழனிக்குமார் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: