சென்னையில் மாற்று திறனாளிகள் நலனுக்காக நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்

சென்னை : சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். மாற்று திறனாளிகள் நலனுக்காக தனியார் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை மயிலாப்பூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நட்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சிறப்பு விருந்தினராக ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றார். மாரத்தான் போட்டியின் மூலம் கிடைக்கும் தொகையை உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவருக்கு  செயற்கை கை, கால் உபகரணங்கள் வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: