வட்டக்கானல் நீர்வீழ்ச்சியை ‘வட்டமிட்ட’ சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நேற்று வட்டக்கானல் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை சீசன் முடிந்து 2 மாதம் கடந்து விட்டது. இருந்தபோதும் நேற்று வார இறுதி விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வந்திருந்தனர். முக்கிய சுற்றுலா இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

பகல் நேரத்தில் வெயில் குறைவாக இருந்தது. மாலை, இரவு நேரங்களிலும் குளிர் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட சூழலை சுற்றுலாப்பயணிகள் ரசித்தனர். கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீரை சுற்றுலாப்பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.

Related Stories: