எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னையில் சொந்த வீடு கட்டித்தரப்படும்

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சென்னையில் சொந்த வீடு கட்டித் தரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.  சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு:  சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சொந்த வீடு கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். தவணை முறையில் வாங்கிக் கொள்வதற்கும் தயாராக இருப்பதாகக் கூறினர். இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்தோம். அவரின் மேலான உத்தரவின்படி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிய இடத்தில், உறுதியான தரமான வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஏற்கனவே  வீடு வாங்காதவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை என்றார்.

Related Stories: