சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் நடந்த சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீரர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினர் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக சாகர் கவாச் என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது 13 தமிழக கடலோர மாவட்டங்களில் 18ம் தேதி காலை 6 மணி முதல் 19ம் தேதி வரை மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சியில் அனைத்து துறைகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர். மேலும், கப்பல், படகு, ஹெலிக்காப்டர்கள், கரையோரம் ஓடும் வாகனங்கள் என 1000திற்கு அதிகமான ஊர்திகள் இப்பணியில் ஈடுபட்டன.