எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடியாக அதிகரிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசும் போது, “ எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை கூடுதலாக கொடுக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு இருக்கிற நிதியை ஒழுங்காக கொடுங்கள்” என்றார். இதேபோல, அதிமுக உறுப்பினர்களும் எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது: எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று இரு பக்கமும் இருந்து வலியுறுத்தப்பட்டது. இதனால், எம்எல்ஏக்களுக்கான 2.50 கோடி நிதியை, 50 லட்சம் அதிகரித்து 3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.

Related Stories: