மதுரை: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட, 4ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த 8.10.2006ல் வேலைக்கு ெசன்று விட்டனர். தோழிகளுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் உறவினரான பாதமுத்து(35), சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதை சிறுமி உறவினரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மம்சாபுரம் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்த ேபாலீசார் பாதமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்ைத விசாரித்த விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், கடந்த 17.12.2015ல் பாதமுத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து பாதமுத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.