அருணாச்சலத்தில் 2வது நாளாக நிலநடுக்கம்

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் நேற்றும் 2ம் நாளாக  நிலநடுக்கம் ஏற்பட்டது.  அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை ரிக்டர் அளவில் 5.6, 3.8 மற்றும் 4.9 புள்ளிகளாக பதிவானது. இதன் தாக்கம் அசாம் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். ஆனால், மக்களுக்கோ, கட்டிடங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  இந்நிலையில் அருணாச்சலில் நேற்று காலை 4.24 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 புள்ளிகள் பதிவானது. கிழக்கு கெமாங் மாவட்டத்தில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

Related Stories: