துரைப்பாக்கம்: ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பல்கேரிய நாட்டை சேர்ந்த நெக்கோலி (31), போரீஸ் (29), லூயிதேநீர் (29) ஆகிய 3 பேர் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் தங்கியிருந்த அறையை ஓட்டல் ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றார். அப்போது, அந்த அறையில் ஏராளமான ஏடிஎம் கார்டுகள் இருப்பது தெரிந்தது. சந்தேகமடைந்த அந்த ஊழியர், ஓட்டல் நிர்வாகத்திடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். உடனடியாக ஓட்டல் மேலாளர் இதுபற்றி கண்ணகி நகர் காவல் நிலையத்தில் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த அறையை சோதனை செய்தனர்.