42ம் ஆண்டு ஆடித்திருவிழா

சென்னை: போரூர் குன்றத்தூர் சாலையில் உள்ள சக்தி நாகாத்தம்மன் ஆலய 42வது ஆண்டு ஆடித்திருவிழா, வரும் 31ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, காப்பு கட்டுதல், கூழ் வார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன், பிரதி வெள்ளிக்கிழமைகளில் 500 பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். 52 ஆண்டுகளுக்கு மேல் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் கும்பம் போடுதல், சுமங்கலி பெண்களுக்கு மஞ்சல் கயிறு, குங்குமம் மற்றும் 6 வகையான பிரசாதம் வழங்குதல், அன்னதானம் போன்றவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆடித்திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் திருவருள் பெற வேண்டும், என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: