ஆன்லைன் மூலம் வாடகைக்கு பயன்படுத்திய 9 பைக்குகள் பறிமுதல்

துரைப்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைன் மூலம்  பதிவு செய்பவர்களை அனுமதியின்றி இருசக்கர வாகனங்களில் சவாரி அழைத்து செல்கிறது. நேற்று அடையாறில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரை சவாரிக்கு சென்ற 9 பைக்குகளை திருவான்மியூர் ஆர்டிஒ அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் மடக்கி பிடித்தார்.   அதில் இருவர் மட்டும் தப்பினர். மற்ற ஓட்டுனர்களிடம் பெயர் மற்றும் விலாசம் வாங்கிகொண்டு எச்சரித்து அனுப்பினர். அவர்களிடம் இருந்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: