சென்னை: விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு சென்ற மெட்ரோ ரயிலில் திடீர் பழுது ஏற்பட்டதால் சென்ட்ரல் நிலையத்துடன் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் 2 மணி நேரமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5.30 மணி அளவில் வண்ணாரப்பேட்டை நோக்கி மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது சென்ட்ரல் நிலையம் வரும் போது ரயிலின் இன்ஜினில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு மாற்று ரயில் உதவியுடன் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.