புதுச்சேரி: புதுச்சேரி, நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோயில் செடல் ஊர்வலத்தில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி அலங்காரம் செய்யப்பட்ட காரை பக்தர் ஒருவர் அலகு குத்தி இழுத்தது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.
புதுச்சேரி, நைனார்மண்டபத்தில் பிரசித்திபெற்ற நாகமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் 36ம் ஆண்டு செடல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தது.