சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ. பன்னிர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவை இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.