முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கெலவரப்பள்ளி அணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. கர்நாடக மாநிலம்  மத்திமலையில் உற்பத்தியாகும் தென்பண்ணை ஆற்றின் குறுக்கே ஓசூர் அருகே கெலவரப்பள்ளி  அணை கட்டப்பட்டுள்ளது.

கர்நாடக  மாநிலம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் தொடர்ந்து 3-வது நாளாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 44. 28 அடியில் 42.15 அடிவரை நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 4.8 கன அடிநீர் தண்ணீர் வைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு நிரம்பும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கெலவரப்பள்ளி  அணை கடல்போல் காட்சியளிக்கிறது

Related Stories: