திருத்தணி முருகன் கோவிலில் 21 நாட்களில் ரூ.74.69 லட்சம் காணிக்கை

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் 21 நாட்களில் ரூ.74.69 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 21 நாட்கள் காணிக்கைகளை என்னும் பணி கோவில் தர்கார் ஜெய்ஷ்ங்கர் இணை ஆணையர் ஞானவேல் உதவி ஆணையர் ஜான்ஸி ராணி முன்னிலையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்களும் பக்தர்களும் ஈடுபட்டனர். இதில் 74 லட்சத்து 68 ஆயிரத்து 747 ருபாய் ரொக்கம், 527 கிராம் தங்கம், 5427கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: