மும்பை : மும்பையில் மின்சார ரயில் விபத்துகளில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தினந்தோறும் மும்பையில் 75.லட்சம் பேர் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் பொங்கிவழியும் மக்கள் கூட்டத்துடன் செல்லும் மும்பை மின்சார ரயில்களில் தொற்றிக்கொண்டு பலர் பயணிக்கின்றனர். இதில் சிலர் ஓடும் ரயிலில் இருந்து விழுந்தும் தண்டவாளத்தை குறுக்கே கடந்து செல்ல முயன்றும் ரயிலில் அடிபட்டு பலியாவது வழக்கம்.