சென்னை: மழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் என முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கோதாவரி - காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம், கழிவுநீரை மறுசுழற்சி செய்து, நன்னீர் தேவையை பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.2500 ஆக உயர்த்தப்படும், திருச்சியில் ரூ.50 லட்சம் செலவில் பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.