அத்திவரதர் உற்சவத்தின் 20-வது நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி, அத்திவரதர் காட்சியளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 20-வது நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி, அத்திவரதர் காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெறுகிறது. முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். கடந்த 19 நாட்களில் சுமார் 22 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

Related Stories: