காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோரை அழைத்து வருவோர் கோவிலுக்கு வருவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.