நெல்லை: தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் முகமது இப்ராஹிம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தேனி மாவட்டத்தில் கோம்பை பகுதியில் மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.