மேட்டூர்: கர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர், வரும் 22ம் தேதி இரவுக்குள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படியும், மாண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், காவிரி இருந்து தண்ணீர் திறக்கப்படும் என கடந்த 9ம் தேதி அறிவித்திருந்தார். இதையொட்டி, கடந்த 16ம் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் நேற்று பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வந்து சேரவில்லை.