திருச்சி சிறையில் இருந்து நைஜீரிய கைதி ஓட்டம்

மதுரை: திருச்சி மத்திய சிறையில் இருந்து நைஜீரிய கைதி திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மத்திய சிறைவளாகத்தில் உள்ள முகாம் சிறையில் இருந்து ஸ்டீபன் (31) என்ற நைஜீரிய கைதி காணவில்லை. உடனே, போலீசார் சிறை முழுவதும் சோதனை நடத்தியபோது, சிறையில் 25 அடி உயர சுவற்றின் அருகே பெரிய மரம் இருந்துள்ளது. அதில் ஏறிய ஸ்டீபன், மறுபுறம் இருந்த மற்றொரு மரத்தின் மூலம் வெளியே இறங்கி தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் நிஷா, தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி கமாண்டட் உமையாள் ஆகியோர், சிறையில் இருந்த இன்ஸ்பெக்டர் உமா மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். நைஜீரிய கைதி திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Stories: