சார் பதிவாளர், பத்திர எழுத்தர் உட்பட 9 பேர் மீது வழக்கு: சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

சேலம்: சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள  சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில் சார்பதிவாளர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் பத்திர பதிவு அலுவலகம்  செயல்பட்டு வருகிறது. இங்கு, பத்திர பதிவு செய்ய வருபவர்களிடம்  புரோக்கர்கள் மூலமாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து வந்த புகார் வந்தது. இதன்அடிப்படையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார்  அந்த அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில்  சார்பதிவாளர் தனசேகரன் உட்பட ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அலுவலகத்தில் ஆங்காங்கே இருந்த கணக்கில் வராத ₹92ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு  போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் சேலம் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.  இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 9 பேர் மீது வழக்கு  பதிவு செய்துள்ளனர். அதன்படி சார் பதிவாளர் தனசேகரன், உதவியாளர் மஞ்சுளா,  இளநிலை உதவியாளர் சீனிவாசன், பத்திர எழுத்தர்கள் சங்கர், முருகேசன்,  சுப்பிரமணி, சண்முகம் நில புரோக்கர்கள் கனகராஜன், வரதராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: