சேலம்: சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில் சார்பதிவாளர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் பத்திர பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பத்திர பதிவு செய்ய வருபவர்களிடம் புரோக்கர்கள் மூலமாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து வந்த புகார் வந்தது. இதன்அடிப்படையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சார்பதிவாளர் தனசேகரன் உட்பட ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.