மதினியை கர்ப்பமாக்கி தற்கொலைக்கு தூண்டியவர் கைது

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கர்ப்பிணியான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது தங்கை கணவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவியின் மூத்த சகோதரிக்கு திருமணமாகவில்லை. பாலமுருகனின் மனைவி கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது பாலமுருகனும், அவரது மனைவியின் அக்காளும் நெருக்கமாக பழகியுள்ளனர்.

இதில் பாலமுருகன் அவரை பலாத்காரம் செய்ததில், அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதையறிந்த அவரது தந்தை, மகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று விஷம் குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: