×

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து

சென்னை: ஜுலை 21-ம் தேதி சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 21-ம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மதியம் 2 மணி முதல் சென்னை கடற்கலை - வேளச்சேரி வழித்தடத்தில் ரயில் சேவைகள் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதே போல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10.30 முதல் பிற்பகல் 3.10 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே காலை 11 முதல் மதியம் 1.50 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ரயில்சேவை தொடங்கும் நேரத்தில் நுடுதலாக 8 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Chennai, Electric Trains, Maintenance Work, Southern Railway
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...