தேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்

சென்னை: மதுரையில் அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர் தேர்வில் பெயில் என ரிசல்ட் வந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவர் மறுமதிப்பீட்டிற்காக அனுப்பியதில் அந்த மாணவர் 47 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து அநத மாணவர் கூறுகையில் இதே போல் எத்தனை மாணவர்களுக்கு நிகழ்ந்தது என்று தெரியவில்லை. நான் மறுமதிப்பீடு செய்யவில்லை என்றால் மீண்டும் 6 மாதம் காத்திருந்து தேர்வு எழுத வேண்டிய சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories: