தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் ஆய்வாளர் மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி சாத்தன் நிலையம் காவல் நிலையத்தில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தட்டார்மடம் காவல் நிலையத்தின் ஆய்வாளராக கஜேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். மேலும் அவர் பணியாற்றிய போது இரு தரப்பினரிடையே நிலப் பிரச்சனையில் வழக்கறிஞர் ஒருத்தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் அந்த பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் ஜேசுதுரை என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.