×

தீவன தட்டுப்பாடு அதிகரிப்பால் அடிமாட்டு விலைக்கு வெளியூர் செல்லும் கால்நடைகள்

* புதுக்கோட்டை பகுதியில் அவலம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனதட்டுப்பாடு அதிகரித்து வருவதால் கால்நடை வளர்ப்போர்கள் கேரள மாநிலத்திற்கு அடிமாட்டுக்கு விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. இங்கு வளர்க்கப்படும் கால்நடைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுக்கோட்டையில் நடைபெறும் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சந்தையில் கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் வாங்கி வரப்படும் ஆடு, மாடுகளை விற்பனை செய்வார்கள். இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்நடை வியாபாரிகள் புதுக்கோட்டையில் ஒவ்வொரு வாரமும் வட்டமடித்து கொண்டு இருப்பார்கள்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பால் மாடுகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வந்தது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து நல்ல கறவை மாடுகள் புதுக்கோட்டடை சந்தைக்கு விற்பனை வந்த வண்ணம் இருந்தது. ஏனென்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு வழிகளில் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைந்தது. குறிப்பாக நல்லமழை பெய்தால் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் நடைபெறும். இதனால் வைக்கோல் அதிக அளவில் கிடைத்தது. மேலும் போர்வெல், கிணறுகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் அதனை பயன்படுத்து மேடான பகுதிகளில் கரவை மாடுகளுக்கு தேவையான தீவன புல்கள் வளர்க்கப்பட்டது.

இதனால் அதிக அளவில் கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் அடைந்தனர். இதபோல் நல்ல மழை பெய்தால் தரிசு நிலங்களில் புற்கள் நல்ல நிலைக்கு வளர்ந்து கிடக்கும். இதனால் செம்மரி ஆடுகள் வளர்ப்பு இருந்தது. செம்மரி ஆடு வளர்போர்கள் வங்கியில் பணம் வைத்திருப்பதுபோல் இருந்தனர். ஏனென்றால் வீட்டிசல் திடீர் செலவு வந்தால் இரண்டு செம்மரி கிடாய் குட்டிகளை பிடித்து கறிக்கடையில் விற்பனை செய்துவிட்டு செலவுகளை சாமாளித்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து மழையின்றி வறட்சி ஏற்பட்டது. இதனால் போர்வெல், கிணறுகள் அனைத்தும் வற்றிவிட்டது. இதனால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்து விட்டது. இதனால் வைக்கோல் உள்ளிட்ட எந்த தீவனமும் கால்நடைகளுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், குண்றன்டார்கோவில், இலுப்பூர், விராலிமலை, பொன்னமராவதி, திருமயம், கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வறட்சியின் காரணமாக விவசாயம் முற்றிலும் பொய்த்து விட்டது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், புற்கள் என எதும் கிடைக்கவில்லை. மேலும் தரிசு நிலங்களில் புற்கள் அனைத்தும் கருகிவிட்டதால் அங்கும் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி கால்நடை வளர்ப்போர்கள் சமாளிக்க முடியாமல் கேரளா மாநிலத்திற்கு அடிமாட்டுக்கு விற்பனை செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய முறையில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கால்நடை வளர்ப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் பிரபலமாக இருந்தது. கரவை மாடுகள், நாட்டு மாடுகள், உழவு மாடுகள் என அனைத்து தரப்பு கால்நடைகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்க்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கால்நடை வியபாரிகள் அதிக அளவில் வர தொடங்கினர். தொடர் வறட்சியால் கால்நடைகளுக்கு கிடைக்க வேண்டிய வைக்கோல், புற்கள் என அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக இந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பால் விவசாயம் முற்றிலும் அழிந்தது. ஒரு சோலத்தட்டை கூட கால்நடைகளுக்கு தீவனமாக கிடைக்ககாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தீவனங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து எடுத்தால்தான் கட்டுபடியாகும். காசுக்கு வாங்கினால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு, வறட்சி ஆகியவற்றினால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்கவில்லை. இன்னும் நாட்கள் ஆக ஆக கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் நாங்கள் வளர்க்கும் கால்நடைகளுளை பட்டினிபோட மனம் வராது. இதனால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்த விலைக்கு அடிமாட்டிற்கு விற்பனை செய்யும் முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு இதுதவிர வேறு தெரியவில்லை என்றனர்.

இரவு படுக்கபோகும்போது தீவனம் போடனும்

கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இரவு படுக்க போகும்முன் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஏதாவது தீவனம் போட்டுவிட்டு வந்தால்தான் எங்களுக்கு தூக்கமே வரும். ஆனால் இந்த ஆண்டு அதுபோல் செய்ய முடியாத அளவிற்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு உரக்கமில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கறவை மாடுகள் குறைவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டிற்கு தேவையான பால்க்கு கரவை மாடுகள் வளர்ப்பார்கள். இதற்கு தேவையான தீவனம் கடைகளில் வாங்கியதில்லை. அவர்கள் வயல் வாய்கால்களில் கிடைக்கும் புற்களை அறுத்துவந்து இரவில் கொடுப்பார்கள். தொடர்ந்து வறட்சியின் காரணமாக புற்கள் அறுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கறவை மாடுகள் வளர்ப்பது வெகுவாக குறைந்து விட்டது.



Tags :
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...