சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதால் செயின் பறிப்பு குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர்: முதல்வர்

சென்னை: சென்னையில் 2 லட்சத்திற்கும் மேல் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பரேவையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி கேள்விக்கு, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடலைப் பாடி முதல்வர் பதில் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் அதிகளவில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதால் செயின் பறிப்பு குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர்.

Related Stories: