×

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபர்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.

இதனையடுத்து பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினை சிபிஐ நீதிமன்றம் 9 மாதத்தில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Babar Mosque, Supreme Court
× RELATED முல்லைப் பெரியாறு அணை வழக்கு...