சென்னை: நடராஜர் சிலையை மீட்க காவல்துறைக்கு அரசு உதவவில்லை என்ற திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமியின் குற்றச்சாட்டுக்கு, பொன்.மாணிக்கவேலுக்கு பல அதிகாரிகளை உதவிக்காக அரசு நியமித்துள்ளது என்று முதல்வர் பதில் தெரிவித்துள்ளார். இதேபோல், மக்களுக்காக போராடுபவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பதாகவும், மது ஒழிப்பு போராளி நந்தினி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார் எனவும் பெரியசாமி கூறியுள்ளார்.