×

உ.பி.யின் நாராயண்பூரில் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கைது

நாராயண்பூர்: உத்தரப்பிரதேசத்தின் நாராயண்பூரில் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். சோன்பத்ராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சென்றிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மாவட்ட நிர்வாக அனுமதிக்காததை கண்டித்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். சோன்பத்ராவில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர். 



Tags : UP, Narayanapur, Priyanka Gandhi, Darna
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...