×

ஆவடி மாநகராட்சி அமைப்பதற்கான சட்ட மசோதா, பேரவையில் தாக்கல்

சென்னை: ஆவடி மாநகராட்சி அமைப்பதற்கான சட்ட மசோதா, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி்த்துறை அமைச்சர் வேலுமணி, சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார். சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, ஆவடி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரிக்கை எழுந்தது. சட்டப்பேரவையில் இதுகுறித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ஆவடியை புதிய மாநகராட்சியாக அறிவித்து அவசரச் சட்டம் பிறப்பித்து, அரசிதழில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Avadi, Corporation, Legislation, Convention
× RELATED காவடி ஆட்டத்துடன் பழநிக்கு புறப்பட்ட தேவகோட்டை பக்தர்கள்