நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில் பந்தலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதை தொடர்ந்து பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவராக செந்தில் முரளி என்பவர் கடந்த 1 ஆண்டிற்கு மேலாக பணியாற்றி வந்தார். மேலும் இவர் இதற்கு முன்பு காங்கேயம் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அங்கு பணியாற்றியவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இந்த நிலையில் அங்கு நீதிமன்றத்தில் வேலை செய்த ஒரு பெண் ஊழியர் தன்னை தகாத வார்த்தையில் பேசியதாகவும், தாக்கியதாகவும் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் நீதிபதி செந்தில் முரளி குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.