சென்னை: வேலூர் மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சட்டமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 22ம் தேதி காலை 10 மணி முதல் வேலூரில் முகாமிட்டு முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.