அசாம் வெள்ளத்தில் கர்ப்பிணிக்கு படகில் ஆண் குழந்தை பிறந்தது

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 30 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அபோலா கிராமத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ருமி பதாரிக்கு கடந்த திங்கட்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. மீட்பு படகில் நர்ஸ்கள் உதவியுடன் ருமி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது படகிலேயே அவருக்கு பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ருமி. அக்குழந்தைக்கு கடவுள் ‘கிருஷ்ணா’வின் பெயரை சூட்டினார். தற்போது மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

Related Stories: