குற்றம் சுமத்துவது ஏன்? கேசிஆர் ஆவேசம்

ஐதராபாத்:  தெலங்கானா சட்டப்பேரவையில் மசோதாக்கள் மீதான விவாதம் நேற்று நடந்தபோது, காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 12 பேர் ஆளும் டிஆர்எஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்த பிரச்னையை காங்கிரஸ் எம்எல்ஏ விக்ரமர்கா எழுப்பினார். அப்போது, ‘ஜனநாயகத்தை காபாற்றுங்கள்’ என்ற பதாகைகளை காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ‘‘அரசியல் சாசனத்தின் 10வது விதிமுறைப்படியே காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் எங்கள் கட்சியில் இணைந்தனர். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி, பாஜ.வில் இணைந்தார். கோவாவில் காங்கிரஸ் எம்பி.க்கள் பாஜ.வில் இணைந்தனர். அப்படி இருக்கும்போது, எங்கள் மீது மட்டும் ஏன் குற்றம் சுமத்த வேண்டும்? காங்கிரஸ் கட்சியில் சரியான தலைமை இருந்தால், அவர்கள் ஏன் உங்கள் கட்சியை விட்டு விலகுகிறார்கள்? இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது,’’ என்றார்.  

Related Stories: