புதுடெல்லி: ‘‘தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 3ல் ஒரு பங்காக குறைய காரணம் என்ன? இதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?’’ என்று மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி கேட்ட கேள்விகளுக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் தான்வே தாதாராவ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி குறைந்தது தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதன் விவரம்:சர்க்கரை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் அனைத்தும் செல்வதை தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் சுட்டுக் காட்டியதா? அப்படி என்றால், அதன் விவரம் என்ன, இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும். கரும்பு உற்பத்தி குறைந்ததன் காரணமாக, தமிழக சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி 35 சதவீதமாக குறைந்ததா? தமிழகத்தின் சர்க்கரை தேவை 18 லட்சம் டன்னாக இருக்கும்போது, தமிழகத்தின் உற்பத்தி 8.5 லட்சம் டன்னாக உள்ளது. இதனால் தமிழக சர்க்கை ஆலைகள் ஏற்றுமதி செய்ய முடியாதா? இந்த நிலைக்கான காரணங்கள் என்ன? 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 23 லட்சம் டன்னாக இருந்து, சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் 3 அல்லது 4வது இடத்தில் இருந்தது உண்மையா? தற்போது தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்ததற்கு காரணங்கள் என்ன? இதை சரி செய்ய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?இவ்வாறு தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி இருந்தார்.