விவசாயியிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த காரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(51), இவரது அண்ணன் சவுந்தரராஜன் என்பவருக்கும் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா வழங்க கோரி இருவரும் கடந்த 2015 அக்டோபரில் நாயுடுமங்கலம் பிர்கா சர்வேயர் சக்திவேல் என்பவரிடம் மனு அளித்தனர்.

இதற்காக ₹6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் சக்திவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.சங்கர் விசாரித்து சர்வேயர் சக்திவேலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: