வேலூர் தேர்தலில் போட்டியில்லை மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கை:வேலூர் மக்களவை தொகுதியில் பணப்பட்டுவாடா சட்ட விரோதமாக நடந்ததாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. இந்த வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்பே மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவது தேர்தல்கள் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையின்மை அதிகரிக்கிறது.

இந்நிலையில் மக்களின் நம்பிக்கையை காக்கும் செயல்களில் கட்சி முழு கவனம் செலுத்தும். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முழு உத்வேகத்துடன் போட்டியிட்டு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால் மக்கள் நீதி மய்யம் வேலூர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: