சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கை:வேலூர் மக்களவை தொகுதியில் பணப்பட்டுவாடா சட்ட விரோதமாக நடந்ததாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. இந்த வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்பே மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவது தேர்தல்கள் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையின்மை அதிகரிக்கிறது.