வேலூர்: ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வேலூர் தொகுதி தேர்தலில் கடந்த 11ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியளவில் நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும், மனுவை வாபஸ் பெற ஜூலை 22ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலின் போது, அதிமுக-வின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் காணாது மனுவை தாக்கல் செய்தார். அதேபோல, நேற்றைய தினம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்.