சென்னை: வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் நம்பிக்கையின்மையை காப்பது மிகமுக்கியம் என்பதால் அதில் முழுக்கவனம் செலுத்த இருக்கிறோம் என அருணாச்சலம் கூறியுள்ளார்.