புதுடெல்லி: குல்பூஷன் ஜாதவுக்கு உடனடியாக விடுதலை கிடைக்கவும், அவருடைய நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசால் எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். குல்புஷன் ஜாதவ் வழக்கு குறித்து சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் அறிக்கையை தாக்கல் செய்தார். சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பாடுபட்ட மூத்த வழக்கறிஞர் உள்ளிட்ட அனைவருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும், குல்பூஷைனை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.