பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலே தோடுங்கி கீழே தோடுங்கி ஆகிய ஊர்களில் 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அன்றாடம் புதூார் பகுதிக்கு வந்து செல்ல வேண்டுமென்றால் 32 கிமீ,. காடு, மலை கடந்து வந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்து செல்லவேண்டிய கட்டாயத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் ஊர்களிலிருந்து பவானி ஆற்றை கடந்தால் புதூருக்கு எளிதில் வந்து செல்லலாம். சில நேரங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றை கடக்க முடியாது. எனவே கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர், உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ., எம்.பி., ஆகியோரிடம் ஆற்றின் குறுக்கே தொங்குப்பாலம் அமைக்க வேண்டும் கோரிக்கை மனுக்கள் கொடுத்து போராடி வந்தனர்.