நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,301 கனஅடியாக உயர்வு

ஈரோடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையானது அதிகளவில் பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தானது அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 301 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். மேலும் இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 530 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 2 ஆயிரத்து 301 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டமானது 58.99 அடியாகவும் மற்றும் நீர் இருப்பு 6.9 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீரும் கீழ்பவானி வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக 5 கனஅடி நீரும் என மொத்தம் 1005 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: