சென்னை : சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்(72) சென்னையில் இன்று காலமானார். நெஞ்சுவலி காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால், சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று மருத்துவமனையில் ராஜகோபால் உயிர் பிரிந்தது. சரவணபவன் ஓட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.