×

அயோத்தி விவகாரம்: மத்தியஸ்த குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அயோத்தி விவகாரத்தில் 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு இடைக்கால தாக்கல் செய்தது. வழக்கை விரைவாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஜூலை 31ம் தேதி வரை சமரசக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


Tags : Ayodhya, Arbitration Committee, Interim Report
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...