ஈரோடு: ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தபட்டனர், மேலும் அங்கு நூற்றுக்கணக்கான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் வருகை தந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் முன்பே வழியிலேயே விவசாயிகளை கைதுசெய்ய நகரில் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்