சென்னை: கஜா புயலானது 2018ம் ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். மேலும் இதில் ஏராளமான வீடுகள் புயல் காரணமாக சேதம் அடைந்தன. இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாவ அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகளாக 16 ஆயிரத்து 695 வீடுகளும் மேலும் அடுக்குமாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னிர் செல்வம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கஜா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.